வெட்டிய தென்னை மரம் மின் கம்பத்தை சாய்த்தது
பவானி: பவானி, ஊராட்சிக்கோட்டை பேரேஜ் பஸ் ஸ்டாப் அருகில், குடியிருப்பு பகுதியில் இருந்த தென்னை மரங்களை சிலர் நேற்று வெட்டிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு தென்னைமரம், அவ்வழியே செல்லும் மின் கம்பி மீது விழுந்தது. இதில் பாரம் தாங்காமல் வீட்டை ஒட்டி இருந்த ஒரு மின் கம்பம் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஊராட்சிக் கோட்டை துணை மின்நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. கம்பத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தென்னை மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
Advertisement
Advertisement