வீடு புகுந்து திருட முயற்சி சிக்கிய போதை ஆசாமி
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த வடக்கு காந்திபுரம், பஞ்சர்கடை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை திறந்து வைத்து விட்டு துாங்கியுள்ளார்.
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ஆசாமி, பொருட்களை திருட முயன்றார். சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் கூக்குரல் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். போதையில் இருந்தவரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்த திவாகரன், 28, என்பது தெரிந்தது. புன்செய்புளியம்பட்டியில் தங்கி நுாற்பாலையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. திவாகரனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
Advertisement
Advertisement