ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்திருவிழா

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 9:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம்,கமலம்,கிளி,யானை, காமதேனு, விருஷபம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர் களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற ஆக.6ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.

Advertisement