டூவீலர் விபத்து மெக்கானிக் பலி

சிவகங்கை : காளையார்கோவில் அருகே டூவீலர் விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

காளையார்கோவில் அருகே சானாஊரணி மெக்கானிக் பீட்டர் அந்தோணிசாமி 50. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு தனது டூவீலரில் காளையார்கோவில் நோக்கி சென்று, மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். குருந்தனி அருகே ரோட்டின் ஓரமாக குடிநீர் மேல்நிலை தொட்டி சுவரில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement