அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

புதுடில்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் பார்லிமென்டில் தெரிவித்துள்ளது. மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, இந்தப் பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
நாய்க்கடி குறித்து செய்திகளில் வெளியான தகவலை குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள் ஜே.பி., பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்க்கடியால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், நாய்க்கடி பிரச்னையை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.
வாசகர் கருத்து (10)
நீதிபாலன் - ,
28 ஜூலை,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
28 ஜூலை,2025 - 15:55 Report Abuse

0
0
Reply
mohan - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 15:27 Report Abuse

0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
28 ஜூலை,2025 - 15:13 Report Abuse

0
0
Reply
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
28 ஜூலை,2025 - 14:06 Report Abuse

0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 14:05 Report Abuse

0
0
Reply
raja - ,
28 ஜூலை,2025 - 13:51 Report Abuse

0
0
Reply
Jack - Redmond,இந்தியா
28 ஜூலை,2025 - 13:39 Report Abuse

0
0
Reply
S Ramkumar - Tiruvarur,இந்தியா
28 ஜூலை,2025 - 13:06 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 ஜூலை,2025 - 13:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி
-
பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு
-
அம்மாவுக்கு கருணை காட்டுங்க; நர்ஸ் நிமிஷா பிரியா மகள் உருக்கமான வேண்டுகோள்!
-
நான் ஓயப்போவதில்லை; எழுச்சிப்பயணம் தொடரும்: இபிஎஸ்
-
வக்கீல் வெட்டிக்கொலை: 5 பேர்கோர்ட்டில் சரண்
-
பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு
Advertisement
Advertisement