சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்


கரூர்: நான்கு ஆண்டுகளில், முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிக-ளுக்கு, 1.39 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்-டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, லாலாபேட்டையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டுகளின் செயல்பாட்டை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் சூரிய சக்தி பம்பு செட் திட்டம் மூலம், மொத்த விலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி-யினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிக-ளுக்கு, 80 சதவீதமும், பொது பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இதர விவசாயிகளுக்கு, 70 சதவீதமும், இதர விவசா-யிகளுக்கு, 60 சதவீதமும் மானியம் வழங்கப்படு-கிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிகளுக்கு, 1.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்-கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரமய-மாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்-திர வாடகை மையங்களை அமைப்பதற்கும் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கலைச்செல்வி, உதவி இயக்-குனர்(ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்-கேற்றனர்.

Advertisement