ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை

கரூர்: -கரூர், ராயனுார் சாலையில் இரவில் இருள்-சூழ்ந்து காணப்படுவதால், கூடுதல் மின்விளக்-குகள் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர், ராயனுார் சாலையில் திண்டுக்கல், ஈச-நத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. இப்பகு தியில் அதிகளவு குடியிருப்-புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.


ஆனால், பிரதான சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் இருட்டாகவே காணப்படுகிறது. இவ்வழியில் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்-களும் அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக நடந்து செல்வோர் மற்றும் வயதானோர் பரித-வித்து வருகின்றனர். போதிய வெளிச்சம் குறைவு காரணமாக இரவு நேரங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்து நடக்-கிறது.


இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement