ந.வைரவன்பட்டியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம்

திருப்புத்துார்: ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.

இக்கோயிலில் ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:15 மணிக்கு வயிரவ சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 4:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று காலை தீர்த்தவாரியுடன், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந் தருளலும் நடைபெறும்.

நாளை காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்தி களுக்கும், வயிரவ சுவாமிக்கும் அபிேஷக, ஆராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

Advertisement