'சிபில் ஸ்கோர்' முறை ரத்துக்கு வரவேற்பு
திருப்பூர், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என்ற அறிவிப்பு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிபில் ஸ்கோர் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
இருப்பினும், சில கூட்டுறவு சொசைட்டிகள், அறிவிப்பு வெளியான பின்னரும், பயிர் கடன் வழங்க மறுத்து வருகின்றன. சிபில் ஸ்கோர் நடைமுறை நீக்கிய பின்னும், பயிர் கடன் வழங்காதது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் கூட்டுறவு சொசைட்டிகளில் பயிர் கடன் வழங்க மறுக்கப்பட்டால், விவசாயிகளை திரட்டி அந்த வங்கியை முற்றுகை இடுவோம். இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் அதிகாலை சோகம்: பஸ், லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலி
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
Advertisement
Advertisement