ராமநாதபுரம் இளைய மன்னர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சென்னை: ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வீட்டில், அவரது முன்னிலையில், நாகேந்திர சேதுபதி, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு அ.தி.மு.க., உறுப்பினர் அட்டையை பழனிசாமி வழங்கினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலர் முனியசாமி உடனிருந்தார்.
கடந்த ஜூனில் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த, இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், மன்னர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான நாகேந்திர சேதுபதி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
Advertisement
Advertisement