துறை அமைச்சரும் பார்த்தாச்சு... 3 ஆண்டுகளும் போயாச்சு... குடியிருப்புகளுக்கு விமோசனம் இல்லை

விழுப்புரம், மகாராஜபுரத்தில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு வீட்டுவசதி வாரியம் கட்டுபாட்டின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வீடுகள், கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டப்பட்டது. இங்கிருந்த 192 வீடுகள் பராமரிப்பு குறைந்து, முற்றிலுமாக சிதிலமடைந்தது. இதனால், குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர். இந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டார். ஆய்வுக்குப் பின், சேதமான கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக வீடுகள் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து 3 ஆண்டு நிறைவடைந்த பின்னரும், கட்டடங்கள் அகற்றப்படவில்லை. புதிதாக வீடுகள் கட்டுவதற்கான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு