கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி

விவசாய உபகரணங்கள், ஆடு, மாடுகள் திருடு போவது குறித்து போலீசில் புகார் அளித்தால் முறையாக நடவடிக்கை எடுக்காததால் போலீசார் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன் சாலாமேடு, வழுதரெட்டி பகுதியில் வீடு, நிலங்களில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த மாடுகள் நள்ளிரவில் திருடு போனது. மினி டெம்போ வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேலும், திண்டிவனம் பகுதிகளிலும் வீடு, நிலத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, மாடுகள் திருடு போனது. இதே போன்று மின் மோட்டார், ஸ்டார்ட்டர், மின் ஒயர்கள் என திருட்டுகள் குறித்து போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

போலீசில் புகார் அளித்தால் வழக்கு பதியாமல் கண்டுபிடித்து தருகிறோம் என கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால், அடுத்த சில தினங்களில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வார சந்தைகளில் திருட்டு கால் நடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் புலம்புவதுடன் போலீசார் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement