தாய்லாந்தில் ஐந்து பேரை சுட்டு கொன்றவர் தற்கொலை

பாங்காக்; தாய்லாந்தில் பிரபல வணிக வளாகத்தில், ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், பிரபல சுற்றுலா தலமான தலைநகர் பாங்காக்கில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்துக்குள், நேற்று நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
Advertisement
Advertisement