வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67,003 கோடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை 67,003 கோடி ரூபாய் உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில், மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூன் 30 நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில், 58,330.26 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. தனியார் வங்கிகளில், 8,673.72 கோடி ரூபாய் உள்ளது.
பொதுத் துறை வங்கிகளில், எஸ்.பி.ஐ.,யில் அதிகபட்சமாக, 19,329.92 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. இதற்கான அணுகலை மேம்படுத்தவும், தேடல் செயல்முறையை எளிதாக்கவும், பிரத்யேக இணையதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடப்பாண்டில் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்
-
இன்றும் நாளையும் மழை பெய்யும்
-
நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்
-
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்
-
பிரிட்டன் ராணுவத்தில் சீக்கிய படைப்பிரிவு
-
முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு
Advertisement
Advertisement