இன்றும் நாளையும் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
@twitter@https://x.com/dinamalarweb/status/1949992308017156280/photo/1 twitter
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில், இன்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு