ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு



காரிமங்கலம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு, 7:30 மணிக்கு பெரியாம்பட்டி ஊருக்குள் வராத, 7 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்து, பாலக் கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாலசுப்ரமணியம் அபராதம் விதித்தார்.

Advertisement