புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

4

திருப்பூர்: புலிப்பல் வைத்திருந்ததாக உடுமலை வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பகட்ட கருமுட்டி, மேல் குருமலை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து,48.


நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் சின்னாறு வணிக வரித்துறை சோதனை சாவடியில், மாரிமுத்துவை புலி பல் வைத்திருந்ததாக பிடித்து கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


அவர்கள் உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் இறந்தார் . வனத்துறையினர் பாத்ரூமில் தூக்கு போட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, மலைவாழ் மக்கள் அடித்து கொன்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement