திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

புதுடில்லி: ஓட்டுக்கள் திருடப்படுகிறது என மீண்டும் மீண்டும் பழி சுமத்தி வரும் ராகுலுக்கு, தேர்தல் கமிஷன் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருந்தே, தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
குறிப்பாக, ஓட்டுக்கள் திருடப்படுகிறது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, அவர் மஹாராஷ்டிராவை போல் பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடப்பதாக பலமுறை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
1. தேர்தல் கமிஷன் ராகுலுக்கு ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
2. தேர்தல் கமிஷன் ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்காது ஏன்?
3. எந்தவொரு பிரச்னை குறித்தும் அவர் தேர்தல் கமிஷனுக்கு ஏன் எந்த கடிதமும் அனுப்பவில்லை.
4. அவர் போலி குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் விசித்திரமானது, மேலும் இப்போது தேர்தல் கமிஷனையும், அதில் பணியாற்றுபவர்களையும்
அச்சுறுத்தத் தொடங்கி உள்ளார். இது வருந்தத்தக்கது.
5. தேர்தல் கமிஷன் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை (போலி குற்றச்சாட்டுகள்) புறக்கணித்து விட்டு, தேர்தல் கமிஷனில் பணியாற்றும் அனைவரும் பாரபட்சமின்றி வெளிப்படையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.











மேலும்
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
-
கடலுாரில் 100.2 டிகிரி வெயில் பதிவு