கடலுாரில் 100.2 டிகிரி வெயில் பதிவு
கடலுார் : கடலுாரில் வெயில் 100.2 டிகிரியை கடந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்து 2 மாதங்களாகிவிட்டன. இருப்பினும், வெயில் கட்டுக்கடங்காத நிலையில் நீடித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே மேற்கு திசையில் காற்று வீசியது. அதன் விளைவாக 100.2 டிகிரி வெப்பம் பதிவானது.
பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. சாலைகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்த நாட்களில் 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்' என்பார்கள். அந்தளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்.
ஆனால் தற்போது காற்றுக்கு பதிலாக வெயில் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், 'இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதத் தில் 100 டிகிரி வெயில் பதிவானது. நாளை (இன்று) முதல், 2 நாட்களுக்கு மழை பெய்யும்' என்றார்.
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்