சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி

திருநெல்வேலி: '' சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. அது எங்கு இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நாடாக மாறி கொண்டு உள்ளது,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
எல்லா உயிர்களையும் நேசித்த இனத்தில், சக மனிதனை வெட்டுவது குத்துவது நடக்கிறது.
பள்ளி மாணவர்கள், அரிவாளோடு ஜாதிய வன்மத்துடன் வெட்டுகிறான். அவன் மனதில் ஜாதி வன்மம் எப்படி உண்டப்பட்டது
அமைப்பே தப்பாக இருக்கிறது. அது தான் இங்கு பிரச்னை.ஜாதி சார்ந்து குளம்.ஜாதி சார்ந்து கிணறு.ஜாதி சார்ந்து சுடுகாடு
பிணத்தை எதற்கு தனித்தனியாக புதைக்கும் இடம்.மழை ஜாதி பார்த்து பெய்யவில்லை. நிலம் யாரும் பாகுபாடு பார்க்கவில்லை.
செத்தாலும் தமிழனுக்கு ஜாதி போகாது என்றால் இந்த சமூகத்தை ஒன்றும் செய்யக்கூடாது. ரொம்ப கடினம்
தமிழகத்தில் நெல்லையில் தான் ஜாதி மோதல்கள் அதிகம் நடக்கிறது.உயிரை மாய்க்கும் பகை வருவது ஏன்?ஜாதி ரீதியில் நடக்கும் கொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றாது. நெல்லையில் ஜாதி கொலை செய்தது.திருப்புவனத்தில் சட்டம் கொலை செய்தது.அஜித்குமாரை கொலை செய்தது சட்டம். அங்கு ஏன் இவ்வளவு பேர் வரவில்லை.ஏன் இவ்வளவு போராடவில்லை. இங்கு இரண்டு ஜாதி ஓட்டு வேண்டும் என்பதால், அரசு துடிக்கிறது. அதற்காக வேலை செய்கிறது.
இதில் ஓட்டு பார்க்கக்கூடாது.எல்லாவற்றையும் ஓட்டாக பார்த்தால் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். மக்களை பற்றி கவலைப்படாது. ஒரு கொலை நடந்தால், கொலையாளியின் சான்றிதழ், கல்வி சான்றிதழ் செல்லாது . ரேஷன் கார்டு கிடையாது. ஓட்டுரிமை கிடையாது. தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது என செய்தால், கொலை செய்வானா? ஜாதி பெருமையுடன் வாழ்ந்து கொள் என்றால் கொலை நடக்குமா?ஆயிரம் கனவுகளோடு படித்து சாதனை படைக்க வேண்டும் என்று இருந்த குழந்தையை ஜாதி கொலை செய்யும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த கொலை சம்பவம் நடந்தது. நிறைய இடத்தில் கொலை நடக்கிறது. சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நாடாக மாறி கொண்டு உள்ளது. நாடா... சுடுகாடா... என தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு அது எங்கு இருக்கிறது. இதெல்லாம் பாவச்செயல் என கல்வி இருந்தது. இப்போது எங்கு இருக்கிறது.
கொலை செய். ஜாதிய எண்ணம், சிந்தனையை கொலை செய்.ஜாதிக்காக சக மனிதனை சாகடிக்க்கூடாது.அப்படி கொலை செய்துவிட்டு என்ன செய்ய போகிறார். தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று ஊட்டப்படாமல் திட்டமிட்டு மதம் மற்றும் ஜாதிப்பற்று ஊட்டப்படுகிறது. எது செத்தாலும், சரி ஜாதி, மதம் செத்துவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் தான் காரணம்.எது செத்தாலும் ஜாதி செத்துவிடக்கூடாது என்பது எவ்வளவு பெரிய கொடூரமான, ஆபத்தான சமூகத்தை உருவாக்கிவிடும் என யோசிக்கவேண்டும். ஜாதிக்கு ஜாதி கட்சி தோன்றுவிட்டது. சாதித்தது என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.




மேலும்
-
ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவுக்கு அனுமதி உண்டா: வெளியானது புதிய அறிவிப்பு
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு