ஏட்டிக்கு போட்டி: ராமதாசுக்கு போட்டியாக பொதுக்குழு கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு

சென்னை: ஆக.17ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 9 ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இது ராமதாசை அதிர்ச்சிக்கு ஆளாக்கியதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆக.17ம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சிறப்பு பொதுக்குழுவில் கட்சியின் தற்போதைய நிலை, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில், ராமதாசுக்கு போட்டியாக வரும் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.

மேலும்
-
ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவுக்கு அனுமதி உண்டா: வெளியானது புதிய அறிவிப்பு
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு