ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி
பல்லாரி: பல்லாரி நகரின் தாளூரு சாலையில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி நடந்தது.
பல்லாரி நகரின், தாளூரு சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருட முயற்சி நடந்தது, நேற்று காலை தெரிய வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.
இதே சாலையில் இருக்கும் ஒரு மளிகைக்கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளை மர்ம நபர்கள் நேற்று முன் தினம் இரவு ஆட்டோவில் துாக்கிச் சென்றனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ எண்ணை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
திருடர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலே, ஏ.டி.எம்.,மிலும் திருட முயற்சி செய்ததா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை