சில்மிஷ தமிழாசிரியருக்கு சிறை ஹெச்.எம்., 3 பேர் மீது வழக்கு

இடைப்பாடி:மாணவியரிடம் சில்மிஷம் செய்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்; உடந்தையாக இருந்ததாக, தலைமையாசிரியர், இரு உதவி தலைமையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் செந்தில் குமரவேல், 58. இவர், மாணவியரிடம் சில்மிஷம் செய்து வருவதாக புகார் எழுந்தது.

நேற்று முன்தினம், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முரளி மற்றும் சங்ககிரி டி.எஸ்.பி., சிந்து விசாரித்தனர். தொடர்ந்து, மாணவியர் புகார்படி, செந்தில் குமரவேல், 58, மீது, போக்சோ வழக்கு பதிந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும், தலைமை ஆசிரியை சீதா, 54, உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி, 41, மல்லிகா, 55, உடற்கல்வி ஆசிரியை விஜி, 46, ஆகியோர் மீது, குற்றவாளிக்கு உடந்தையாக குற்றத்தை மறைத்ததாக, போக்சோ வழக்கு பதிந்தனர்.

தலைமை ஆசிரியை உட்பட நான்கு பேரையும், சங்ககிரி மகளிர் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement