அன்புமணியின் 2ம் கட்ட பயணம் ஆக.7ல் துவக்கம்; 9ல் பொதுக்குழு
சென்னை:பா.ம.க., தலைவர் அன்புமணி தன் இரண்டாம் கட்ட நடை பயணத்தை ஆக.7ம் தேதி துவக்குகிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ம் தேதி முதல், 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற முழக்கத் துடன், நடைபய ணத்தை அன்பு மணி துவக்கினார்.
ஆக.4ம் தேதி திருப்பத்துாரில் முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார். இரண்டாம் கட்ட பயணத்தை, ஆக. 7ம் தேதி துவக்குகிறார். அன்று முதல் ஆக. 18ம் தேதி வரை, நடைபயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக. 9 ல் பொதுக்குழு அன்புமணி மற்றும் பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன் அறிக்கை: 'பா.ம.க., பொதுக்குழு கூட்டம், ஆக.9 காலை 11:00 மணிக்கு, மாமல்லபுரத்தில் நடக்க வுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் தவ றா மல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப் பட்டுள்ளது. ஆக.17ல், பொதுக்குழு கூட்டம் நடக்கும்' என, ராமதாஸ் நேற்று அறிவித்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி கூட்டியுள்ளார்.
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை