நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம் : நர்சிங் மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்தவர் சரவணன், 43; இவரது 18 வயது மகள், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 31ம் தேதி நர்சிங் இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement