சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் அப்ரூவர் மனு தள்ளுபடி
மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ.,கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அங்கு ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு: குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசு, காவல்துறைக்கு நேர்மை, உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக (அரசு தரப்பு சாட்சியாக) மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற போலீசார் சம்பவத்தின்போது செய்தது குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அப்ரூவராக மாற அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தார்.
சி.பி.ஐ.,தரப்பு: வழக்கில் முதலாவது எதிரியாக ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. தனது தரப்பு தவறை மறைக்க மற்ற எதிரிகள் மீது ஸ்ரீதர் குற்றம் சாட்டுகிறார். மனு ஏற்புடையதல்ல.ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு: மற்ற போலீசார் தாக்கினர் என ஸ்ரீதர் கூறுவதிலிருந்து அவர் சம்பவத்தின்போது ஸ்டேஷனில் இருந்தது உறுதியாகிறது. அப்படி இல்லாதவர் அப்ரூவராக மாற முடியாது. வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கில் ஸ்ரீதர் மனு செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி, 'மனுவில் தகுதி இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
மேலும்
-
108 அடி உயர கோபுரத்துடன் காளிகா துர்கா பரமேஸ்வரி கோவில்
-
இன்று முதல் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ரெட் அலெர்ட்'
-
மாணவி கொலை வழக்கு பயாஸ் ஜாமின் மனு தள்ளுபடி
-
சாளுக்கிய மன்னர் கனவில் தோன்றிய பாதாமி பனசங்கரி அம்மன்
-
சோலார் மின் உற்பத்தி ஆர்வமற்ற விவசாயிகள்
-
எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு