அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

12


மாஸ்கோ: அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை, ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் அருகில் கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டார். அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுவது இதுதான்



ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமாக, தடைகளும் கட்டுப்பாடுகளும் தற்போதைய வரலாற்று காலகட்டத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாக மாறிவிட்டன. இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கம் வீழ்ந்துவருவதை பொறுக்க முடியாத அமெரிக்கா, ஒரு புதிய காலனித்துவ கொள்கையை பின்பற்றுகிறது. சர்வதேச அரங்கில் சுதந்திரமான பாதையை தேர்வு செய்பவர்களுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை பயன்படுத்துகிறது.

ரஷ்ய நட்பு நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பது என்பது, இறையாண்மை மிக்க நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்பது ஆகும். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமம்.


எந்தவொரு வரிப் போர்களோ அல்லது தடைகளோ வரலாற்றின் இயல்பான போக்கைத் தடுக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குறிப்பாக குளோபல் சவுத் எனப்படும் ஏழை நாடுகள், பிரிக்ஸ் நாடுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.


மந்தமான பொருளாதார வளர்ச்சி கொண்ட அமெரிக்காவால், விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளே ஊக்குவித்த தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக, அரசியல் ரீதியாக வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





@block_Y@

உரிமை உண்டு

அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் கூறியதாவது:ரஷ்யா உடன் வர்த்தகம் மற்றும் உறவை துண்டிக்க பல நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செய்திகளை பார்க்கிறோம். இதுபோன்ற அறிக்கைகளை சட்டப்பூர்வமானதாக நாங்கள் கருதவில்லை. இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளிகளை தேர்வு செய்யும் உரிமை உண்டு. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டளிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். தங்களின் நலனுக்காக வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அம்சங்களை தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.block_Y

Advertisement