எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: இபிஎஸ்

ஓமலூர்: ''தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்,'' என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறினார்.
@1brசேலம் மாவட்டம் ஓமலூரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். அப்படி செய்தால் அரசியலில் அவர் (திருமாவளவன்) காணாமல் போய்விடுவார்.
அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே நான் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிவிட்டேன். ஜாதிக்கு, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. ஒரு ஜாதியை வைத்து எல்லாம் அரசியல் பண்ணுவது என்பது இயலாத காரியம்.
இன்றைக்கு தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்சி கட்சி என்று பேசி வருகிறேன். எங்களின் கட்சியில் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், உள்ளனர். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.
இந்த ஒற்றுமை அவருக்கு (திருமாவளவன்) பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்க வில்லை என்ற எரிச்சல். அதன் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட வார்த்தைகளை (எம்ஜிஆர் பற்றிய விமர்சனம்) கக்கிக் கொண்டு இருக்கிறார்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டன. இந்த கூட்டணி 8 மாதத்துக்கு நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்வி இருக்கிறது. தேர்தலுக்காக இன்னமும் 8 மாத காலம் இருக்கிறது. அந்த 8 மாத காலத்தில் சிறப்பான கூட்டணி அமையும்.
பாமக பொதுக்குழு என்பது தனிப்பட்ட விவகாரம். வேறு ஒரு கட்சியின் விவகாரத்தில் நாங்கள் எப்போதும் தலையிடுவது இல்லை. அது அவர்களின் (பாமக) உட்கட்சி விவகாரம். அதில் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
வாசகர் கருத்து (8)
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
09 ஆக்,2025 - 17:51 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
09 ஆக்,2025 - 16:50 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
09 ஆக்,2025 - 16:40 Report Abuse

0
0
Reply
Mariadoss E - Trichy,இந்தியா
09 ஆக்,2025 - 14:08 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
09 ஆக்,2025 - 15:20Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
09 ஆக்,2025 - 15:31Report Abuse

0
0
Anand - chennai,இந்தியா
09 ஆக்,2025 - 15:42Report Abuse

0
0
Reply
மணி - ,
09 ஆக்,2025 - 14:07 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'அரசியல் உறுதி இருந்தது; கட்டுப்பாடுகள் இல்லை': ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கான விளக்கமளித்த விமானபடை தளபதி
-
கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவன் பலி; ஒருவர் மாயம்; சுற்றுலா சென்ற போது சோகம்
-
20 சதவீத பண்டிகை கால சலுகை பயண திட்டம் : அறிமுகம் செய்கிறது இந்திய ரயில்வே
-
டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்
-
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: சொல்கிறார் வாசன்
-
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடிய பிரதமர் மோடி
Advertisement
Advertisement