கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்


பாலக்காடு: கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் மாணவர்கள் 10 பேர், கேரள மாநிலம் பாலக்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூரில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த துளை வழியாக அருண்குமார் மற்றும் ஸ்ரீகவுதம் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.


உடனடியாக தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் ஸ்ரீகவுதம் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மேலும், மாயமான அருண்குமாரை மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா வீரர்கள் தேடி வந்தனர். தற்போது, அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement