ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆவடி: திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக, நேற்று மதியம் ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்டவாளத்தை கடந்தபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement