ஆலோசனை கூட்டம்

கடலுார் : கடலுாரில் முத்தமிழ் கல்வி, கலை மற்றும் தமிழ்ப் பணி அறக்கட்டளை ஆலோ சனைக் கூட் டம் நடந்த து.

அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தலைவராக சிங்காரம், செயலாளராக ரவி, பொருளாளராக ஜெயபால், துணைத்தலைவர்களாக ஜெகத்ரட்சகன், ஜெகதீசன், அறிவழகன், இணை செயலாளர்களாக அரங்க அறிவொளி தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் தமிழ்ப்பணியாக தினமும் ஒரு திருக்குறள் எழு தும் பணியை கதிர் முத்தையன் துவக்கி வைத்தார்.

உலக திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன், அரசு தலைமை மருத்துவமனை கிளை நுாலக வாசகர் வட்ட கவுரவ தலைவர் இளங்கோவன் வாழ்த்திப் பேசினர்.

ஏற்பாடுகளை அண்ணாமலை, உதயா வெங்க டேசன் செய்திருந்தனர்.

Advertisement