குட்டையில் விழுந்து சிறுவன் பலி
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே குட்டையில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெரியபகண்டை காலணியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீஷ், 6; அதே பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார்.
பிரதீஷ் நேற்று மாலை 6:00 மணிக்கு, அவரது நண்பர்களுடன் ஏந்தல் ஏரி குட்டை பகுதியில் விளையாட சென்றார். அப்போது பிரதீஷ் ஏரி குட்டையில் தவறி விழுந்து சகதியில் சிக்கி இறந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதியினர் இறந்த நிலையில் சிறுவன் பிரதீஷ் உடலை மீட்டனர்.
இது குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு
-
முகாமினால் பயனடைந்தவர்கள் விபரம் வெளியிடப்படுமா: திமுகவுக்கு பாமக கேள்வி
-
பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு
-
டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு
Advertisement
Advertisement