அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள சுவாமி நாராயண் கோவில் வளாக சுவரில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களை காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கிறுக்கி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணம், க்ரீன்வுட் பகுதியில் சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலின் பெயர் பலகையில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களை கருப்பு மையால் கிறுக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் ஹிந்து கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நான்காவது தாக்குதல் நடந்துள்ளது.

'இந்த வகையிலான தாக்குதலை தொடர்வது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தான்.

'அமெரிக்க எம்.பி.,க்கள் இந்த தாக்குதலுக்கு வெறுமனே கண்டனம் மட்டும் தெரிவிக்காமல், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்' என கூறியுள்ளது.

சிகாகோவில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய துாதரகமும் இந்த தாக்குதலை கண்டி த்துள்ளது.

இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


@block_B@

சீக்கியர் மீது தாக்குதல்




அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை பயிற்சி சென்ற சீக்கியரான ஹர்பால் சிங், 70, மீது மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினார். தகவல் அறிந்து வந்த போலீசார், ஹர்பால் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தலையில் பலத்த காயத்துடன் சுயநினைவின்றி உள்ளார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் அதே பகுதியை சேர்ந்த வீடற்றவரான போ ரிச்சர்ட் விடாகிலியானோ என்பது தெரிந்தது. இது இனவெறி தாக்குதல் இல்லை. சொத்து விற்பது, வாங்குவது தொடர்பான பிரச்னை என போ லீசார் கூறினர்.block_B

Advertisement