தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
திருச்சி: மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ., கட்சியினரை, போலீசார் கைது செய்தனர்.
கிட்னி முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த தால், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி வேந்தரின் மகனும், மண்ணச்சநல்லுார் எம்.எல்.ஏ.,வுமான கதிரவன் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, திருச்சி பா.ஜ.,வினர் அறிவித்தனர்.
அதனால், நேற்று மாலை, மண்ணச்சநல்லுாரில் உள்ள எம்.எல்.ஏ., கதிரவன் அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி
-
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு
-
டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது
-
நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
Advertisement
Advertisement