காரை கொண்டு மோதி மருமகனை கொலை செய்த மாமனார்

மேலூர்: பூதமங்கலம் சதீஷ்குமார் 21, தும்பை பட்டி ராகவி 24, (இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார்).

இந்நிலையில் சதீஷ்குமார் ராகவியை திருமணம் செய்தார் .இத் திருமணத்திற்கு ராகவி யின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . தவிர மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் ராகவியின் தந்தை நகையை எடுத்துச் சென்றதாக புகார் கொடுக்கவே இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் இன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.

சதீஷ்குமார் டூவீலரில் ராகவியை அழைத்துச் சென்றார் . அய்யா பட்டி விளக்கருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று டூ வீலர் மீது மோதி தாக்கியதில் சதீஷ்குமார் இறந்தார் . ராகவி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement