பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பள்ளி சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்திய தாய் உட்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த மா.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகள் ஜனனி, 8; தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜோதி கடந்தாண்டு இறந்த நிலையில், ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் அவரது தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா,30 ; ஆகியோரின் பராமரிப்பில் உள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்தி உள்ளனர். இதனையறிந்த கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் அளித்த புகாரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியின் தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா, 30 ;ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்
-
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு துவக்கம்!
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா
-
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்: விண்வெளி நிலைய பயணம் பற்றி சுபான்ஷு சுக்லா பெருமிதம்
-
உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்
Advertisement
Advertisement