த.வெ.க மாநாடு நிறைவு; 35 நிமிடம் பேசினார் விஜய்!

14

மதுரை: மதுரை பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் பேசினார்.


தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடந்தது. விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலை 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் கை கொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிய பின் கடைசியில் விஜய் பேசினார். மொத்தம் 35 நிமிடங்கள் பேசிய அவர், திமுக மற்றும் பாஜ பற்றி சரமாரியாக விமர்சனம் செய்தார்.

3500 போலீசார்



2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட்டனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மாநாட்டு திடலுக்குள் கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தினர். டாக்டர்கள், 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன.

நிகழ்ச்சி முடியும் வரை தொண்டர்களுக்கு பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா வழங்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு முதலே தொண்டர்கள் மேடைக்கு வந்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தவெக மாநில மாநாட்டை நேரலையில் பார்க்க கிளிக் செய்யவும்

https://www.dinamalar.com/videos/live-and-recorded/videos/6861

Advertisement