உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்

வாஷிங்டன்: கருணை மிகுந்த தீர்ப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க பிரபல நீதிபதியும், சமூக ஊடக நட்சத்திரமுமான பிராங்க் காப்ரியோ,88. இவர் கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் வழங்கும் தீர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
அவரது தீர்ப்புகள், கருணை அடிப்படையில் இருக்கும். வழக்கு விசாரணையும் எவர் மனதையும் புண்படுத்தாமல், காண்பவர் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும்.
நீதிமன்ற அறையில் அவரது கருணை மற்றும் நகைச்சுவை உணர்வுக்காக மிகவும் விரும்பப்பட்ட நீதிபதி கேப்ரியோ, 'Caught in providence' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானார். உலகின் மிகச்சிறந்த நீதிபதி என்று அவரை பல்லாயிரக்கணக்கான பேர் கொண்டாடி வருகின்றனர்.
@block_B@நீதிபதி காப்ரியோ தனது சொந்த ஊரான ரோட் தீவின் பிராவிடன்ஸில் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார்.
தனது கடைசி சமூக ஊடகப் பதிவுகளில் ஒன்றில், நீதிபதி காப்ரியோ தனது உடல் நலம் குணம் அடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
block_B
@block_Y@நீதிபதி காப்ரியோவுக்கு 60 வயது மனைவி ஜாய்ஸ் காப்ரியோ உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.block_Y










மேலும்
-
திமுக - பாஜ மீது விஜய் கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!
-
கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: விஜய் திட்டவட்டம்!
-
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்
-
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு துவக்கம்!
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்