இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

1

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* வேலூர்

* திருப்பத்தூர்

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* தர்மபுரி

* சேலம்

நாளை (ஆகஸ்ட் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement