பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

அரியாங்குப்பம் : ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் அருகே உள்ள ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், மாணவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement