பிராண்ட் பெயரில் போலி ஆடைகள்
திருப்பூர் : பிரபல நிறுவனத்தின் பிராண்ட் பெயரில் போலியாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 29. இவரது நிறுவனத்தின் பெயரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்து வருகிறார். அவிநாசிலிங்கம்பாளையத்தில் இவரது நிறுவனம் உள்ளது. இவரது நிறுவன பிராண்ட் பெயரில் போலியாக சிலர் ஆடைகள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்வது தெரிந்தது.
அவரது நிறுவன மேலாளர் சஞ்சய் இது குறித்து வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடைகள் சிவசுப்ரமணியம் நிறுவன பிராண்ட் பெயரில் போலியாக தயாரித்து விற்பனைக்கு தயார் செய்வது தெரிந்தது.
போலீசார் இது குறித்தும் இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும்
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு
-
வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
-
டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே