வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை;


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சப் ரிஜிஸ்டர் இல்லை. ஆகையால் கிளார்க் பதவியில் வகிப்பவர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் நிலம் விற்பவர்களிடம் வாங்குபவர்களிடம் தனிப்பட்ட முறையில் தனக்கு சாதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இவரது நடவடிக்கைகளுக்குஉயர் பதிவு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். பத்திர பதிவு செய்வதை (பெண்டிங்) காலதாமதம் ஏற்படுத்துகின்றனர். பத்திரப்பதிவை தள்ளிப் போட வேண்டியது பின் சம்பந்தப்பட்டவர்களிடம் பேரம் பேச வேண்டியது இந்த செயல் வாடிக்கையாக வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து வருகிறது.
அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கைகளால் பத்திரப்பதிவு செய்ய வரும் நிலம் விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக நானே பாதிக்கப்பட்டுள்ளேன்.

அதாவது கடந்த 2.8.2025 அன்று வள்ளுவபாக்கம் கிராமத்தில் சர்வே எண் 45/4 B2, 5A2, 5B,7,8,,11,12 ஆகிய சர்வே எண்கள் கொண்ட இடத்தை பத்திர பதிவு செய்ய அரசுக்கு ரூபாய் 56 லட்சம் மட்டும் ஆன்லைன் மூலம் தொகையை கட்டினேன். ஆனால் கிளார்க் பதிவு செய்ய மாட்டேன் என்றும் கூறி அவர் ரொம்பவும் பொறுப்பில்லாமலும், அலட்சியமாக நடந்து கொண்டார். முத்தியால்பேட்டை ஊராட்சி யில் உட்பட்ட வள்ளுவபாக்கம் கிராமத்தை காஞ்சிபுரம் மாநகராட்சி என்று பொய் சொல்கிறார். என்னுடைய பணம் பத்திரபதிவுக்கு ஆன் லைன் மூலம் ரூபாய் 56,00,000 செலுத்தி விட்டேன். என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இதனால் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை

வாலாஜாபாத் பத்திர பதிவு அலுவலகம் முன்பு , தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து என் தலைமையில் 500 நபர்களுடன் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement