கலைத்திருவிழா போட்டிகள்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் குறுவள மையத்திற்கு உட்பட்ட, 10 துவக்கப்பள்ளிகள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள் கே.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஊர் தர்மகர்த்தா ஜெயராமன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் சல்மா பேகம் முன்னிலை வகித்தார்.

விழாவில், அனைத்து போட்டிகளிலும் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.முதல் டங்களை பிடித்த மாணவர்கள்
வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளனர்.

Advertisement