காமராஜருக்கு இலங்கை மாஜி., எம்.எல்.ஏ., மரியாதை

விருதுநகர் : இலங்கை நாட்டின் கொழும்புவில் 2015 முதல் 2019 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குருசுவாமி.

இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கங்காகுளத்தில் தனது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி வழிபாட்டிற்காக வந்தார். அதன் பின் விருதுநகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் வீட்டிற்கு வந்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Advertisement