அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!

நியூயார்க்: வெளிநாடுகளில் இருந்து வரும் சிறிய பார்சல்களுக்கான வரி விலக்கை ரத்து செய்து உள்ள நிலையில், புதிய வரி குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்காததால், அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை, 25 நாடுகள் நிறுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறையை கடைபிடிக்கும் நாடுகளுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுக்கு வரும், 800 டாலர்களுக்கு உட்பட்ட சிறிய பார்சல்களுக்கு வரி விலக்கு இருந்தது.
அந்த வரி விலக்கு நாளை முதல் ரத்து செய்யப் படுகிறது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், எவ்வளவு வரி என்பதை வெளியிடவில்லை. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாடு களுக்கு விதித்துள்ள அதே அளவுக்கு, பார்சல்களுக்கும் வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை அமெரிக்கா வெளியிடவில்லை. மேலும், பார்சல்களுக்கான வரி எப்படி வசூலிக்கப்படும் என்பதிலும் தெளிவில்லை. இதன் காரணமாக இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட 25 நாடுகள் அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை நிறுத்தியுள்ளதாக, ஐ.நா.,வின் சர்வதேச தபால் யூனியன் கூறியுள்ளது.
அதே சமயம் 100 டாலருக்கு குறைவான மதிப்புடைய பரிசு பொருட்கள் அனுப்ப அமெரிக்கா வரி விதிப்பதில்லை. எனவே அந்த சேவை மட்டும் தொடருகிறது.
மேலும்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி
-
செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்