செப்., 5ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
கரூர், வரும், 5ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என, கலெக்டர் தங்க
வேல் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், 5ல் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த பார், ஹோட்டல் பார் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் செய்யக்
கூடாது. அன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement