முன்விரோத தாக்குதலில் ஒருவர் கைது; 4 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைப்பட்டு அருகே முன்விரோத தாக்குதலில் 4 பேரை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஒருவரை கைது செய்து, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரை சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 25; இவர் கடந்த சில தினங்களுக்கு மது அருந்தும்போது, புத்திராம்பட்டு சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ், 25; என்பவருடன் தகராறு ஏற்பட்டது. 31ம் தேதி பிரகாஷ்க்கு போன் செய்து வாக்குவாதம் செய்த சதிஷ், நேரில் வர பிரகாஷ்க்கு அழைப்பு விடுத்தார்.
அன்று இரவு 8:30 மணிக்கு பிரகாஷ் தனது நண்பர்கள் முருகன், ஏழுமலை, சிபிராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு புத்திராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். அங்கிருந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன் மகன்கள் நிஜந்தன், 30; விஷ்ணு, 27; குமார் மகன் சதீஷ், 27; சரவணன் மகன் விக்னேஷ், 26 ஆகிய 5 பேரும், பிரகாஷ் மற்றும் நண்பர்களை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த பிரகாஷ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய சதீஷை கைது செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி
-
பிளஸ் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
-
அ.தி.மு.க.வுடன் அனுசரணையாக செல்லுங்கள் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு மேலிடம் அறிவுரை