முற்றுகை போராட்டம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பு சார்பில் பஞ்சமி நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். தாசில்தார் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement