மின்சாரம் தாக்கி பெண் பலி
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே ஓட்டலில் வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
விழுப்புரம் மாவட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த குமார் மனைவி சுதா, 37; இவர், கெங்கவரம் தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி சுதா சுயநினைவை இழந்தார்.
செஞ்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுதா, சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரான்ஸ் - இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!
-
வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி
-
திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
-
கோவையில் சந்தேகத்துக்கு உரிய 7,000 பேரின் கைரேகை சேகரிப்பு
-
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
-
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஹிந்து முன்னணி வாழ்த்து
Advertisement
Advertisement