வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு

வடலுார்: வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வடலுார் அடுத்த அரங்கமங்கலம் கிராமத் தில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.

இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (எ) குமார், 47; என்பவர் நேற்று முன்தினம் திடீரென புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

பணியில் இருந்த வி.ஏ.ஓ., சந்திரவதனன், 45; என்பவரையும் மிரட்டினார். அங்கு வந்த ராமலிங்கம், 65; இவரது மகன் மோகன்தாஸ், 27; ஆகியோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்.

புகாரின் பேரில், வடலுார் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement